Pages

என்னைப் பற்றி

நான் கபிலன் சச்சிதானந்தன்
Kapilan Sachchithananthan, Sri lanka.
Follow Me: @iamkapilan

Search Posts

Wednesday, September 5, 2018

How to permanently delete deleted data from your Android phone? நிரந்தரமாக அழிக்கப்பட்ட தரவுகளை உங்கள் ஆண்ராய்ட் ஸ்மார்ட் போனில் இருந்து மீளப்பெறாதவாறு அழிப்பது எப்படி

நிரந்தரமாக அழிக்கப்பட்ட தரவுகளை உங்கள் ஆண்ராய்ட் ஸ்மார்ட் போனில் இருந்து மீளப்பெறாதவாறு அழிப்பது எப்படி?  அழிந்த தரவுகளை மீட்க Google Play Store இல் Apps உள்ளன. இனி அழிக்கப்போகும் தரவுகளை அவற்றை நிரந்தரமாக அழிக்கக் கூடிய file shredding app மூலம் யாராலும் மீட்க முடியாத வண்ணம் அழிக்கலாம். ஆனால் முன்னர் அழித்தவற்றை எவ்வாறு மீட்க முடியாத வண்ணம் அழிப்பது? நீங்கள் இது பற்றி Google இல் தேடினால் கிடைக்கும் அனைத்து Apps ம் 2018 ஆண்டின் மதிப்பின் படி போலியானவை.

பின்வரும் முறை மூலம் அவற்றை மீட்க முடியாதவாறு அழிக்கலாம். இது தவிர வேறு ஏதாவது முறை தெரிந்தால் Comment பண்ணவும்.

Step one: Encrypting

I recommend encrypting your device before you are getting ready to wipe it. The encryption process will scramble the data on your device and, even if the wipe doesn't fully delete the data, a special key will be required to unscramble it.

To encrypt your device on stock Android, enter settings, click on Security, and select Encrypt phone. The feature may be located under different options on other devices.


Step two: Perform a factory reset

The next thing you will want to do is perform a factory reset. This can be done on stock Android by selecting Factory data reset in the Backup & reset option in the settings menu. You should be aware that this will erase all of the data on your phone and that you should backup anything you don't want to lose.





















Encrypt செய்த பின்னர் Factory Reset செய்வதன் மூலம் அழிக்கப்பட்ட  தரவுகள் மாத்திரமல்லாது ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து தரவுகளும் மீட்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். ஆகவே முன் கூட்டியே தேவையானவற்றை Backup செய்து வைத்துக்கொள்ளவும். 

Note
Encryption என்பது Lock Screen Password or Pattern or Finger Print or Face Unlock போன்ற ஒரு பாதுகாப்பு முறை. இது போனில் உள்ள தரவுகளை Lock Screen Password இன்றி வாசிக்க முடியாதவாறு அவற்றின் நிலையை மாற்றும் ஒரு தொழில்நுட்பமாகும். Encryption என்பது Factory Reset இன் ஒரு படி இல்லை. இரண்டும் வேறு வேறு. இதில் சொல்லப்படுவது யாது எனின் Encryption  செய்த Smartphone  யை Factory Reset செய்தால் Lock Screen Password தெரியாமல் அதில் அழிந்த தரவுகளை மீட்க முடியாது. கிட்ட தட்ட நிரந்தரமாக அழிந்தது போலவே ஆகும். Encryption செய்யாவிடின் Factory Reset செய்தாலும் தரவுகளை மீட்க முடியும்.

பொதுவாக விலை அதிகமான உயர் ரக ஸ்மார்போன்கள் Encrypt செய்யப்பட்டே விற்கப்படுகின்றன. Android ஸ்மார்ட்போன்கள் தான் By Default Encrypt  செய்யப்படாமல் பெரும்பாலும் விற்கப்படுகின்றன.

அதற்கு காரணம் Encrypt  செய்வதால் Budget அல்லது விலை குறைந்த போனின் வேகம் குறையும் என்பதே ஆகும். ஆனால் நான் அவ்வாறு உணரவில்லை. ஆகவே உங்கள் Smartphone யையும் Encrypt  செய்யுங்கள். இது உங்கள் Smartphone இன் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். யாராலும் இலகுவாக உங்கள் Smartphone யை ஊடுருவ முடியாது. அப்படி ஊடுருவினாலும் உங்கள் Lock Screen Password தெரியாமல் உங்கள் Smartphone இல் உள்ள தரவுகளை வாசிக்க முடியாது. உங்கள் Lock Screen Password தான் அந்த தரவுகளை வாசிக்க கூடிய விதத்தில் மாற்றும் திறவுகோல். Encrypt   செய்தவுடன் உங்கள் Smartphone இன் Lock Screen Password  யை நீங்கள் மறந்தால் உங்களால் கூட உங்கள் Smartphone இல் இருந்து எதையும் மீள பெற முடியாது. முழுவதும் அழித்து தான் உங்கள் Smartphone யை அதன் பின் பாவிக்க முடியும்.

Factory Reset செய்த பின்னர்  நீங்களும் உங்கள் Smartphone  யை Encrypt  செய்யுங்கள். Encrypt  செய்யும் போது புதிய Lock Screen Password தான் கொடுக்க வேண்டும். ஆகவே Encrypt  செய்ய முன்னர் உங்கள் தற்போதைய Lock Screen Password யை இலகுவானதாக்கினால், Encrypt  செய்யும் போது உங்களுக்கு பழக்கமான Lock Screen Password யையே பயன்படுத்த முடியும்.

முதல் முறை Encrypt செய்த பின்னர் எப்பொழுது எல்லாம் Restart (switch on/off) செய்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் Lock Screen Password கொடுத்தால் தான் உங்கள் Phone இயங்கவே தொடங்கும். அந்த அளவுக்கு இது உங்கள் போனுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. 

Encrypt செய்யப்பட்ட போனின் Lock Screen Password யை மறந்தால் போனை மீள் அழித்து தான் பயன்படுத்த முடியும்.

குறிப்பு: உங்கள் ஸ்மார்ட்போனை encrypt செய்து பின்னர் உங்கள் போனில் உள்ள தரவுகளை அழிப்பதற்காக factory reset செய்த பின்னர், மறுபடியும் அதே Lock Screen Password பயன்படித்தி உங்கள் ஸ்மார்ட்போனை lock அல்லது encrypt செய்ய வேண்டாம். எப்பொழுதும் புதிய Lock Screen Password யை பயன்படுத்தவும்.

Contact me on Twitter @iamkapilan
if you need any support.

Monday, April 30, 2018

Sri Lanka Digital Television - இலங்கை டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை ISDB-T/DVB-T2

இலங்கையில் விரைவில் தொலைக்காட்சி சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படவிருக்கிறது. அதற்கான செயற்பாடுகள் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கத்தால் இலங்கைத் தொலைகாட்சி சேவையை மேம்படுத்த தகுந்த நியமத்தை பரிந்துரைக்கவென ஒரு உபகுழு உருவாக்கப்பட்டது. அவர்கள் DVB-T2 நியமத்தைப் பரிந்துரைத்தனர். ஆகவே இந்தியா போன்ற நாடுகளில் பாவனையில் உள்ள DVB-T2 நியமத்தைப் பயன்படுத்த உத்தேசித்திருந்தனர். அதற்கேற்றால் போல் உள் நாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளான Sirasa TV, Hiru TV, Derena TV போன்றவை அந்த நியமத்திற்கு உண்டான கருவிகளை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். 

ஆனால் பின்னர் ஜப்பான் நாட்டின் ISDB-T நியமத்தை உள்வாங்கிக் கொள்வதாக அரசாங்கம் அறிவித்து அதற்கான வேலைகளை ஆரம்பித்தது. இதன் பின்னனியில் அரசியல் காரணங்களும் ஜப்பான் நாட்டினால் எமது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் இருப்பதாக பலர் கருதினர்.


தொழில்நுட்பம் பற்றிய அறிமுகம்:

அலைமருவி (Analog அல்லது analogue) தொலைக்காட்சி என்பது அலைமருவிய பரப்புகை மூலம் ஒத்திசைந்த ஒலி மற்றும் ஒளி குறிப்பலைகளை ஒளிபரப்புவதாகும். இந்த முறை பரப்புகையில் ஒளிப்படத்தின் பல்வேறு புள்ளிகளில் உள்ள ஒளிர்மை, வண்ணப்பொலிவு போன்ற தகவல்களும் ஒலியின் பண்புகளும் அவற்றை ஏற்றிச் செல்லும் மின்காந்த அலையின் ஏதேனும் ஒரு பண்பை (அலையின் அளவையோ, அதிர்வெண்ணையோ, அலைக் கட்டத்தையோ) தொடர்ந்த முறையில் மாற்றி அனுப்பப்படுகிறது. எண்ணிமத் தொலைக்காட்சி வரும்வரை அனைத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் அலைமருவிய முறைமையிலேயே ஒளிபரப்பப்பட்டன. அலைமருவித் தொலைக்காட்சி கம்பியில்லா பரப்புகை புவிப்புறத் தொலைக்காட்சி மூலமும் கம்பிவடத் தொலைக்காட்சியாக ஓரச்சு கம்பிவடம் மூலமும் பரப்பப்பட்டன.

டிஜிட்டல் தொலைக்காட்சி/எண்ணிமத் தொலைக்காட்சி (Digital television, DTV) அல்லது எண்மருவித் தொலைக்காட்சி எனப்படுவது ஒளித மற்றும் ஒலித தகவலோடை எண்ணிம செய்முறையில் அனுப்பப்படுவதாகும். இது முழுமையும் அலைமருவி செய்முறையில் தனித்தனி அலைவரிசைகளில் அனுப்பப்படும் அலைமருவித் தொலைக்காட்சிக்கு எதிரானதாகும். தொலைக்காட்சித் தொழினுட்பத்தில் 1950களில் வண்ணத் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது கருதப்படுகிறது. இதனால் வானொலி அலைக்கற்றை சேமிக்கப்படுவதால் உலகின் பல நாடுகளும் அலைமருவித் தொலைக்காட்சி பரப்புகையிலிருந்து எண்ணிமத் தொலைக்காட்சிக்கு மாறி வருகின்றன. ஆனால் உலகின் பல பகுதிகளிலும் ஒரே சீர்தரம் பேணப்படாது வெவ்வேறு சீர்தரங்கள் நிலுவையில் உள்ளன:

முன்னேறிய தொலைக்காட்சி முறைமைக் குழு (Advanced Television System Committee, ATSC) சீர்தரம் புவிப்புற பரப்புகையில் ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணிம ஒளிதப் பரப்புகை - புவிப்புறம் (DVB-T) ஐரோப்பாவிலும் ஆத்திரேலியாவிலும் கையாளப்படுகிறது.

ISDB-T என்றால் என்ன? புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை . ISDB-T International என்பது H.264/MPEG-4 AVC  என்பவற்றைப் பயன்படுத்தி Integrated Services Digital Broadcasting (ISDB)  யை தழுவி உருவாக்கிய டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைக்கான நியமமாகும்(Standard).

புவிப்புற ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பரப்புகை (ISDB-T) மிகுந்த முன்னேற்றமான தொழினுட்பமாக விளங்குகிறது. இதன் மூலம் நிலைத்துள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தவிர எடுத்துச்செல்ல வல்ல அல்லது நகர்பேசி தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் நல்ல முறையில் வழங்க முடியும். இது பல கட்ட பரப்புகையை ஆதரிப்பதுடன் முன்னேறிய ஒளித, ஒலித குறியீடுக் கருவிகளைக் கொண்டுள்ளது.

எண்ணிம புவிப்புற பல்லூடக பரப்புகை (DTMB) ஒத்தியங்கு நேரப்பகுப்பு (TDS)- செங்குத்து அதிர்வுப்பகுப்பு சேர்த்தனுப்பும் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகிறது. 

அனலோக் தொலைக்காட்சி அலைவரிசைகள் எவ்வாறு இயங்குகின்றது?
தொலைக்காட்சி அலைவரிசையின் பிரதான கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஒளிபரப்புக் கோபுரத்திற்கு சிக்னல் அனுப்பப்பட்டு அக்கோபுரம் மூலம் அலை வடிவில் அத்தொலைக்காட்சி அலைவரிசை நமது வீடுகளுக்கு வந்தடைகிறது. இதற்கென ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைக்கும் தனித்தனியே frequency கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக: கொழும்பில் சக்தி TV இல் UHF 25 ஒளிபரப்பப்படும் போது, கிளிநொச்சியில் UHF: 46 ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.

அனலொக் முறையில் உள்ள பிரச்சனைகள் என்ன?
இந்த முறையில் ஒளிபரப்பை மேற்கொள்ளும் பொழுது அணைவருக்கும் ஒரே தரமான தெளிவான தொலைக்காட்சி அலைவரிசைகள் பார்க்கக் கிடைப்பதில்லை. மேலும் பிடித்தமான அலைவரிசையை தெளிவாகப் பெற்றுக் கொள்ள அடிக்கடி வீட்டில் உள்ள அண்டனாவை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்ப வேண்டி ஏற்படும். ஒரு தொலைக்காட்சி அலைவரிசையின் ஒளிபரப்பினுள் இன்னொரு தொலைக்காட்சி அலைவரிசையின் தடங்கள் அல்லது கலப்பு ஏற்படலாம். தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனத்தால் பார்வையாளர்களுக்கு உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய HD நிகழ்ச்சிகளை இந்த நியமத்தைப் பயன்படுத்தி வழங்க முடியாமை. தேவையான frequency கள் வழங்கப்படாமையால் அனைத்துப் பகுதிகளுக்கும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கொண்டு சேர்க்க முடியாமை. தெளிவான காட்சிகளை மக்களுக்கு வழங்க அதிகளவு சக்தியைப் பாவித்து ஒளிபரப்ப வேண்டிய நிலைமை போன்றவற்றை சொல்லலாம்.

டிஜிட்டல் Terrestrial (புவிப்புற) ஒளிபரப்பு எவ்வாறு நடைபெறுகிறது?
சில செயற்பாடுகள் அனலோக் ஒளிபரப்பை ஒத்தது. அதாவது ஒளிபரப்பு மத்திய நிலையத்தினால் தொலைக்காட்சி அலைவரிசை சிக்னலை வழங்கி, அதை frequencyகளுடாக நம்வீட்டில் உள்ள அண்டனாவின் மூலம் நமது தொலைக்காட்சியில் அவ் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெறுவது.

ஆனால் இங்கு பயன்படுத்தப்படும் ஒளிபரப்பு முறை வித்தியாசமானதாகும்.

அனலோக் முறையில் ஒளிபரப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொலைக்காட்சி அலைவரிசையை தமக்கு சொந்தமான ஒளிபரப்பு கோபுரங்களுடாக வெவ்வேறு frequencyகளைப் பயன்படுத்தி ஒளிபரப்பு வீட்டில் உள்ள தொலைக்காட்சித் திரையில் தோன்றச் செய்கிறோம்.

உதாரணமாக:
கொழும்பு - பிதுருதாலகால - தொலைக்காட்சி - VHF 5 Antenna ஊடாக - வீட்டுத் தொலைக்காட்சிக்கு.
கொழும்பு - பிதுருதாலகால - தொலைக்காட்சி - Channel Eye Antenna ஊடாக - வீட்டுத் தொலைக்காட்சிக்கு.

ஆனால் டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தில் அவ்வாறு இல்லை

ஒரு நிறுவனத்தின் இயலுமையைப் பொறுத்து தன் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ஒரே frequency ஊடாக ஒளிபரப்புதல்

அல்லது

பல தொலைக்காட்சி அலைவரிசைகளை(ITN, Shakthi TV, Sirasa TV, Star Sports..மேலும் பல)  ஒரு ஒளிபரப்பு மத்திய நிலையத்திற்குப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து ஒரு ஒளிபரப்பு கோபுரம் ஊடாக வீட்டு அண்டனாக்களுக்கு சிக்னல்களை அனுப்பி அவற்றை தொலைக்காட்சியில் பெற்றுக் கொள்ளல்.

நாம் அறிவோம் அனலோக் முறையில் ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் வெவ்வேறு frequency(VHF 05/ UHF 50/ UHF 21/UHF 39) களைப் பயன்படுத்தி ஒளிபரப்பை மேற்கொள்கின்றன என..

ஆனால் டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தில் ஒளிபரப்பு மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படும் அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் ஒரே ஒரு frequency மட்டுமே கொடுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. மத்திய நிலையத்திற்கு அனுப்பப்படும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து 2, அல்லது 3 என தொலைக்காட்சி அலைவரிசைக் குழுக்களுக்கு வழங்கப்படும் frequencyகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். எப்படியிருந்தாலும் நம்மால் இந்த நியமத்தின் மூலம் ஒரு frequency இல் பல தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெற முடியும்.

உதாரணமாக: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள DVB T2 நியமத்தில் ஒரு frequency இல் கிட்டத்தட்ட 6 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்பப்படுகின்றனவாம்.

டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி அலைவரிசைகளை எமது வீட்டின் தொலைக்காட்சி பெட்டிகளில் பெற்றுக் கொள்வது எப்படி?

நம் வீட்டுத் தொலைக்காட்சிகளில் காணப்படும் டிஜிட்டல் டியூனர் மூலம் அல்லது நம் தொலைக்காட்சிப் பெட்டியில் அவ் வசதி இல்லாவிடின் டிஜிட்டல்  box அதாவது STB பொருத்துவதன் மூலம் நாம் அவ் தொலைக்காட்சி அலைவரிசைகளை கண்டுகழிக்கலாம்.

தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் மட்டும் போதுமானதா? இல்லை. இந்த நியமத்திற்கான ஒளிபரப்புக் கோபுரங்கள் மூலம் ஒளிபரப்பும் சிக்னல்களை உள்வாங்கிக் கொள்ள நமது தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் support பண்ண வேண்டும். உதாரணமாக ISDB-T நியமத்தினூடாக ஒளிபரப்புக் கோபுரங்கள் சிக்னல்களை ஒளிபரப்புமாயின் உங்கள் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் DVB T2 நியமத்திற்கான டிஜிட்டல் டியூனர் இருக்குமாயின் உங்களால் அந்த தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்வையிட முடியாது. ஆகவே உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் ISDB-T நியமத்தில் ஒளிபரப்பப்படும் டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பார்க்க வேண்டுமாயின் கட்டாயம் ISDB-T நியமத்தை support  பண்ணும் டியிட்டல் டியூனர் இருக்க வேண்டும் இல்லை என்றால் ISDB-T நியமத்தை support  பண்ணும் STB டிஜிட்டல் பாக்ஸ் பொருத்தித் தான் பார்க்க முடியும்.

தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள டியிட்டல் டியூனர் இருக்குமாயின் டிஜிட்டல் தொலைக்காட்சிகளைப் பெற்றுக் கொள்ள வேறு என்ன தேவை?  டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்திற்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் அண்டனாவை நாம் தற்பொழுது அனலோக் தொலைக்காட்சி அண்டனா பொருத்தியிருக்கும் இடத்தில் பொருத்த வேண்டும். ஆனால் தற்பொழுது சந்தையில் இருக்கும் தொலைக்காட்சி அண்டனாக்கள் பெரும்பாலும் இந்த டிஜிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பெற்றுக் கொள்ள பயன்படுத்தக் கூடிய வகையிலேயே உருவாக்கபட்டுள்ளன. எதற்கும் நீங்கள் புதிதாக வாங்குவதாக இருந்தால் விசாரித்து வாங்கவும்.

டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி நியமத்தின் ஊடாக தொலைக்காட்சி அலைவரிசைகளை மட்டுமா பெற முடியும்?  இல்லை. டியிட்டல் தொலைக்காட்சி frequency ஊடாக டிஜிட்டல் வானோலி அலைவரிசைகளையும் நமது தொலைக்காட்சியில் வானோலி சாதனத்தில் கேட்பது போல் காட்சி இன்றி கேட்க முடியும்.

டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி அலைவரிசைகளை தொலைக்காட்சி பெட்டிகளில் மாத்திரமா பார்க்க முடியும்? இல்லை. டிஜிட்டல் Terrestrial தொலைக்காட்சி Support  பண்ணும் தொலைக்காட்சி பார்க்கக் கூடிய Mobile போன்களிலும் பார்க்க முடியும்.

டிஜிட்டல் தொலைக்காட்சி நியமத்தின் மிக முக்கிய நன்மை என்னவென்றால் இதன் மூலம் மிகவும் தரமுயர்ந்த(e.g HD) உள்ளடக்கமுள்ள நிகழ்ச்சிகளை அல்லது தரவுகளை ஒளிபரப்ப முடியும். அதற்காக இதன் மூலம் தரம் குறைந்த (e.g SD) உள்ளடக்கமுள்ள நிகழ்ச்சி ஒளிபரப்பை செய்ய முடியாது என்றில்லை. டிஜிட்டல் தொலைக்காட்சி நியமமானது பெரிய திரையோ! சிறிய திரையோ! எந்தத் தரத்திலான ஒளிபரப்பையும் ஏற்றுக் கொள்ளும்.

இவற்றிற்கு மேலதிகமாக தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிகழ்ச்சி நிரலைப் பார்க்கும் வசதி, நிகழ்ச்சியை வெவ்வேறு பார்வைக் கோணங்களில் பார்க்கும் வசதி(தொலைக்காட்சி அலைவரிசை அதற்கு இயைபடைந்திருந்தால் மாத்திரம்), கருந்துக் கணிப்பு நிகழ்ச்சிகளுக்கோ அல்லது போட்டி நிகழ்ச்சிகளுக்கு வாக்களிக்கும் வசதி, காலநிலை தகவல்களைப் பெறும் வசதி, அனர்த்தங்களுக்கான முன்னறிவிப்பைப் பெறும் வசதி போன்றவற்றை டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் பெற முடியும்.

இது போன்ற டிஜிட்டல் தொலைக்காட்சி நியமம் பற்றிய மேலதிக தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

தொகுப்பு மற்றும் மொழி பெயர்ப்பு
கபிலன் சச்சிதானந்தன்.

நன்றி FM & TV Sri Lanka Digital மற்றும் Wikipedia, செய்தி இணையத்தளங்கள்.

Wednesday, March 14, 2018

இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி: பணம் ஈட்டித்தரும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைய ஒரு சந்தர்ப்பம்

நம்மில் பலர் blogs மற்றும் சிறு இணையத்தளங்களை சிறு தொழிலாக அல்லது ஒரு பொழுது போக்காக முன்னெடுத்து வருகிறோம். அதில் இருந்து எப்பொழுதாவது சிறு வருவாய் ஒன்றை பெற்றுக் கொள்ள விரும்பியதுண்டா? அது சிறிதளவாக இருந்தாலும் கூட நம்மில் பலர் முயற்சித்திருக்க மாட்டோம். காரணம் Google Adsense என்னும் பணம் ஈட்டித்தரும் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் இணைய உலகின் ஜாம்பவான் நம் எல்லோரையும் உள்வாங்குவதில்லை. அதன் காரணமாக நாம் வேறு சில அவ்வகை நிகழ்ச்சித் திட்டங்களை நாட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதில் பெரும்பாலானவை வெற்றியளிப்பதில்லை. 
Adfly என்பது அதைப் போன்ற ஒரு சிறந்த பணம் ஈட்டித்தரும் நிகழ்ச்சித் திட்டம். இதன் மூலம் உங்கள் blog, website மட்டுமில்லாது நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரும் link மூலமும் சம்பாதிக்கக் கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக உங்கள் பேஸ்புக் கணக்கில் 1000 நண்பர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் Adfly program ஊடாக ஒரு link யை உருமாற்றி  உங்கள் நண்பர்களுடன் பகிரும் பொழுது உங்கள் நண்பர்களில் குறைந்தது 50% ஆனவர்கள் அதைப் பார்த்து likes and comments பண்ணமாட்டார்களா? நீங்கள் உங்கள் நண்பர்களுடன் செய்திக்கான link யைப் பகர்ந்தது மட்டும் அல்லாது அதன் மூலம் சிறு பணத்தையும் ஈட்டிவிடுவீர்கள். இது சிறப்பாக இருக்குமில்லையா?

ஆம் இது Adfly program ஊடாக மாத்திரமே சாத்தியம். இது முற்றிலும் இலவசம். இதை உங்கள் blogs, websites களில் நடைமுறைப்படுத்துவதும்  இலகுவானது. இதற்கு சிறு தொழில்நுட்ப அறிவே போதுமானது. சிறப்பாக சொல்வதாயின் அவர்கள் குறிப்பில் சொல்லியிருப்பதை அப்படியே பின்பற்றுவதன் மூலம் இலகுவில் அதை செயற்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஒரு விடையத்தில் தேர்ச்சியானவராயின் ஏன் அதை முற்றிலும் இலவசமாக மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்?

Adfly program இல் ஒரு publisher ஆக உங்கள் கணக்கைத் தொடங்குங்கள். உங்கள் கணக்குள் நுழைந்து  tools இற்குச் செல்லவும். பின்னர் select Full page scripts for your website and blogs பின்னர் அங்கு குறிப்பிட்டிருக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். சிறிது நேரத்திலேயே இதன் மூலம் உங்கள் blogs, websites களில் இருந்து சிறு தொகைப் பணத்தை ஈட்டிக் கொள்ள முடியும்.

உங்களிடம் ஒரு அருமையான விடையத்தைப் பற்றிய link இருக்குமாயின் அதனையும் பணம் ஈட்டித்தரும்  Adfly program link ஆக உங்கள் கணக்குக்குச் சென்று shrink செய்து இலகுவாக மாற்றிக் கொள்ள முடியும். அதனைப் பகிர்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பார்வையாளர்கள் அங்கு காட்டப்படும் விளம்பரத்தை 5 செக்கன்களின் பின்னர் இடை (Skip) நிறுத்தினால் போதும். உங்கள் கணக்கில் வருவாய் வைக்கப்படும். அவர்களுக்கு நீங்கள் பகிர்ந்த விடையம் எந்தவொரு தடையுமில்லாது காண்பிக்கப்படும்.
நீங்கள் எதிர்பார்க்கலாம் இது ஒரு உண்மையான நிகழ்ச்சித் திட்டமா? அல்லது ஏமாற்றுத் திட்டமா என்று. இது 100% உண்மையான நிகழ்ச்சித் திட்டம். இதன் மூலம் பலர் பயனடைந்துள்லார்கள். Google Adsense நிகழ்ச்சித் திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உன்னதமான தெரிவு Adfly program

இன்றே இணையுங்கள்
Join Now: Click Here

Wednesday, January 10, 2018

அதிஷ்டலாபச்சீட்டில் வெற்றியாளராகும் வாய்ப்பை அதிகரிப்பது எவ்வாறு? Things you should know before purchase a lottery.

இலங்கையில் நீங்கள் லாட்டரி டிக்கட் அல்லது அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளவரா? 

அதிஷ்டலாபச்சீட்டில் வெற்றியாளராகும் வாய்ப்பை அதிகரிப்பது எவ்வாறு? 
ayalavan.blogspot.com
பல முறை வாங்கியும் மிகக் குறைந்த அளவு பரிசுத் தொகையைத் தான் நீங்கள் வெற்றி கொண்டுள்ளீர்களா?

இலங்கையில் அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களை வாங்கி ஏமாந்து போனதாக உணர்கிறீர்களா?
ayalavan.blogspot.com
பிழை அவர்கள் மீது இல்லை. உங்கள் மீது தான். ஆம், அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களை வாங்குவதில் ஒரு தந்திரம் அல்லது யுக்தி உள்ளது. அதைக் கடைப்பிடித்தால் மனதிற்கு நிம்மதியான ஒரு நல்ல தொகையை இலகுவாக அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களில் இருந்து ஒரு முறையாவது வெல்ல முடியும்.

"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" - ஞாபகம் இருக்கட்டும்
ayalavan.blogspot.com

சரி விடையத்திற்கு போவோம். அதிஷ்டலாபச்சீட்டில் வெற்றியாளராகும் வாய்ப்பை அதிகரிப்பது எவ்வாறு?  இது பற்றிய புரிதலை நான் நம் சகோதர மொழியான ஒரு சிங்கள மொழி blog இல் இருந்து பெற்றுக் கொண்டேன். அதை எழுதியவர் Madura Harshana என்பவராவார். அந்த பயனுள்ள தகவலை பலரிடம் கொண்டு செல்லும் நோக்கில் தமிழில் எனக்குத் தெரிந்த சிங்கள மொழி அறிவை வைத்து மொழிபெயர்க்கிறேன்.
ayalavan.blogspot.com
நீங்கள் ஒரு அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் ஒரு நபராகவோ அல்லது விற்கும் ஒரு நபராகவோ இருக்கலாம் அல்லது அதிஷ்டலாபச்சீட்டு டிக்கட்களினது அது சார்ந்த விடையங்களினதும் உண்மைத் தன்மையை ஆராயும் ஒரு நபராகவும் இருக்கலாம். எனது கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
ayalavan.blogspot.com
அதிஷ்டலாபச்சீட்டு வாங்குவது அல்லது விற்பது இலங்கையைப் பொருந்த மட்டில் ஒரு சட்டரீதியான சூதாட்டம் ஆகும். சூதாட்டம் என்பதன் விளைவை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல மதங்கள் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டிய விடையமாகவே போதிக்கின்றன. "பாஞ்சாலி சபதம்" ஒரு உதாரணம் மட்டுமே!
ayalavan.blogspot.com
ஆனால் ஆசை யாரைத்தான் விடுவதில்லை. இன்று அதிஷ்டலாபச்சீட்டு போட்டிகள் ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டன. "களவும் கற்று மற" என்ற பாரதியின் வரிகளை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான். "ஏறினா நொங்கு விழுந்தா சங்கு"

இலங்கையில் மூன்று வகையான லாட்டரி டிக்கட்கள் உள்ளன.
ayalavan.blogspot.com
1. குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு
2. சுரண்டிப் பரிசு வெல்லும் அதிஷ்டலாபச்சீட்டு
3. LOTTO அதிஷ்டலாபச்சீட்டு
ayalavan.blogspot.com

நாம் அதிகம் அன்றாட வாழ்வில் கடந்து செல்வது  குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு ஆகும். ஆகவே அதைப் பற்றி முதலில் பார்ப்போம். குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு இரண்டு வகைப்படும்.
ayalavan.blogspot.com
1. சிறிய பரிசுத் தொகை:
சிறிய பரிசுத் தொகை வெல்லும் குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு என்பது அதிகளவு வெற்றி வாய்ப்பை அள்ளி வழங்கும் ஒரு லாட்டரி டிக்கட் வகை ஆகும். இதற்கு காரணம் இந்த லாட்டரி டிக்கட் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையேயாகும். உங்களுக்கு தெரிந்தவரையில் 10 எண்களில் இருந்து ஒரு வெற்றி இலக்கத்தை தெரிவு செய்வதை விட 5 எண்களில் இருந்து ஒரு வெற்றி இலக்கத்தை தெரிவு செய்வது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதாக இருக்குமல்லவா? இதுவே அதிஷ்டலாபச்சீட்டு குழுக்களில் நீங்கள் வெற்றியாளராவதற்கான சந்தர்ப்பத்தில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக சந்தையில் இருக்கும் தஷலக்ஷபதி அதிஷ்டலாபச்சீட்டைப் பார்த்தோமானால் அதன் குழுக்கலின் போது வெறும் 55 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளில் இருந்து 3 வெற்றி இலக்கங்கள் தெர்வு செய்யப்படுவதோடு  26 ஆங்கில எழுத்துக்களில் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தெரிவு செய்யப்படுகிறது. தெர்ந்தேடுக்கப்பட்ட 3 வெற்றி இலக்கங்களும் உங்கள் டிக்கட்டில் உள்ள இலக்கங்களுடன் பொருந்தினால் 1 இலட்சம் ரூபாய் பணப் பரிசையும்  ஆங்கில எழுத்தும் வெற்றி இலக்கங்களோடு பொருந்தினால் 10 இலட்சம் ரூபாய் பணப்பரிசையும் வெற்றி கொள்ளலாம். ஆனால் சூப்பர் பரிசுத் தொகை வெல்வதற்கான குழுக்கல் இவ்வாறு நடைபெறாது
ayalavan.blogspot.com
உதாரணமாக சூப்பர் போல் அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை எடுத்து நோக்குவோம். இதில் 73 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளில் இருந்து 4 வெற்றி இலக்கங்களை தேர்ந்தெடுப்பதுடன் ஆங்கில எழுத்துக்கள் 26 இல் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தேர்ந்தெடுக்கப்படும். அதனால் தஷலக்ஷ்பதி அதிஷ்டலாபச்சீட்டில் வெல்வதை விட சூப்பர் போல் அதிஷ்டலாபச்சீட்டு குழுக்களில் வெற்றியாளராவது கடினம். ஆனால் ஒரு வேளை நீங்கள் வெற்றியாளரானால் 4 கோடி ரூபாய் பணப்பரிசை வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். உண்மையில் 10 இலட்சம் ரூபாவை இலக்காக வைத்து அதிஷ்டலாபச்சீட்டு வாங்கினால் வெற்றியாளராக நீங்கள் மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால் 4 கோடியை இலக்காக வைத்து அதிஷ்டலாபச்சீட்டு வாங்கினால் வெற்றியாளராக நீங்கள் மாறும் வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும். சில வேளை இதன் மீது உங்களுக்கு நம்பிக்கையில்லாமல் கூட போகலாம். ஆனால் வெற்றியாளரானால்  10 இலட்சத்தை விட 40 மடங்கு அதிகமான பரிசுத் தொகை உங்கள் வசமாகும்.
ayalavan.blogspot.com
சில சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டுகளும் அவற்றின் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையும்:
ayalavan.blogspot.com
தஷலக்ஷ்பதி - 55 பந்துகளில் 3 வெற்றி இலக்கங்கள்
லக்ன வாசனா - 61 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
கலக்ஷி ஸ்டார் - 60 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
நியத ஜய - 65 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ayalavan.blogspot.com
2. பெரிய பரிசுத் தொகை:
பெரிய பரிசுத் தொகை வெல்லும் குழுக்கல் முறை அதிஷ்டலாபச்சீட்டு என்பது குறைந்தளவு வெற்றி வாய்ப்பை அள்ளி வழங்கும் ஆனால் பெரிய தொகை பணப்பரிசை வாரி வழங்கும் ஒரு லாட்டரி டிக்கட் வகை ஆகும். இதற்கு காரணம் இந்த லாட்டரி டிக்கட் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையேயாகும். உதாரணமாக சனிக்கிழமை அதிஷ்டம் (ஷனிதா வாசனா) அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை எடுத்து நோக்கினால் இதில 75 எண்கள் பொறிக்கப்பட்ட பந்துகளிள் இருந்து 4 வெற்றி இலக்கங்களை தேர்ந்தெடுப்படுதோடு 26 ஆங்கில எழுத்துக்களில் இருந்து 1 ஆங்கில எழுத்தும் தெரிவு செய்யப்படுகிறது. நீங்கள் வெற்றியாளரானால் 3 கோடி ரூபாயில் ஆரம்பிக்கும் சூப்பர் பணப்பரிசை வெல்லும் வாய்ப்பை பெறுவீர்கள். பெரிய தொகைப் பணப்பரிசை வெற்றி கொள்வதே உங்கள் இலக்காக இருந்தால் சனிக்கிழமை அதிஷ்டம் (ஷனிதா வாசனா) அதிஷ்டலாபச்சீட்டு உங்களுக்கு கைகொடுக்கும். ஆனால் வெற்றியாளராகும் வாய்ப்பு சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டை விட குறைவாகும்.
ayalavan.blogspot.com

சில பெரிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டுகளும் அவற்றின் குழுக்கலின் போது பயன்படுத்தப்படும் பந்துகளின் எண்ணிக்கையும்:

கோடிபதி ஷனிதா - 80 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ஷனிதா வாசனா - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
அத கோடிபதி - 75 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
சூப்பர் போல் - 73 பந்துகளில் 4 வெற்றி இலக்கங்கள்
ayalavan.blogspot.com
சூப்பர் பரிசுத் தொகை அதிகரிக்கும் பொழுது  குழுக்களுக்குப் பயன்படுத்தப்படும் எண் பொறிக்கப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். பந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுது வெற்றியாராகும் சந்தர்ப்பம் சிறிய பரிசுத் தொகை அதிஷ்டலாபச்சீட்டு குழுக்கலை விட குறைவாகும். 
ayalavan.blogspot.com

உங்களுக்கு அதிஷ்டலாபச்சீட்டு வாங்கும் எண்ணம் இருந்தால் மேல் குறிப்பிட்ட விடையங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். அதே வேளை நீங்கள் வெல்ல விரும்பும் பரிசுத் தொகை எது என்பதையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
ayalavan.blogspot.com



This article is a pure Tamil Translation of following Sinhala article by Madura Harshana. Things you should know before purchase a lottery. ටිකට් පතක් මිලදී ගැනීමට පෙර ඔබ දැනගතයුතු කරුණු. All credit goes to the original creator of this article. i am Kapilan Sachchithananthan who just translated the information from Sinhala language to Tamil Language with some alteration to make it readable and reachable by many Tamil Speaking audience. I have no intention of doing copyright infringement